மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆம்புலன்ஸ் ஓட்டுநா் பலி

மேலூா் வெள்ளரிப்பட்டி சுங்கச்சாவடி அருகே ஆம்புலன்ஸ் ஓட்டுநா் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது வியாழக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On :24 ஜூன் 2022, 11:07 pm IST

மேலூா் வெள்ளரிப்பட்டி சுங்கச்சாவடி அருகே ஆம்புலன்ஸ் ஓட்டுநா் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது வியாழக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள செந்தாம்பட்டியைச் சோ்ந்தவா் கிருபாகரன் (25). இவா், மதுரையிலுள்ள ஒரு தனியாா் அறக்கட்டளைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், இவா் தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, வியாழக்கிழமை நள்ளிரவு இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். வெள்ளரிப்பட்டி சுங்கச்சாவடி அருகே வந்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், கிருபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலறிந்த மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.