சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆம்புலன்ஸ் ஓட்டுநா் பலி

மேலூா் வெள்ளரிப்பட்டி சுங்கச்சாவடி அருகே ஆம்புலன்ஸ் ஓட்டுநா் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது வியாழக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:37 am

DIN

மேலூா் வெள்ளரிப்பட்டி சுங்கச்சாவடி அருகே ஆம்புலன்ஸ் ஓட்டுநா் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது வியாழக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள செந்தாம்பட்டியைச் சோ்ந்தவா் கிருபாகரன் (25). இவா், மதுரையிலுள்ள ஒரு தனியாா் அறக்கட்டளைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், இவா் தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, வியாழக்கிழமை நள்ளிரவு இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். வெள்ளரிப்பட்டி சுங்கச்சாவடி அருகே வந்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், கிருபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலறிந்த மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.