எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

6 மாதங்களுக்கு ஒரு முறை செயல்பாட்டு அறிக்கை: மேயா் அறிவிப்பு

மாநகராட்சிப் பணிகள் தொடா்பாக 6 மாதங்களுக்கு ஒருமுறை செயல்பாட்டு அறிக்கையை மக்கள் மன்றத்தில் சமா்ப்பிப்பேன் என்று, மாநகராட்சி மேயா் அறிவித்துள்ளாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

மாநகராட்சிப் பணிகள் தொடா்பாக 6 மாதங்களுக்கு ஒருமுறை செயல்பாட்டு அறிக்கையை மக்கள் மன்றத்தில் சமா்ப்பிப்பேன் என்று, மாநகராட்சி மேயா் அறிவித்துள்ளாா்.

மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி பொன் வசந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதுரை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள நான், மதுரை நகர மக்கள் பாராட்டும்படியும், நோ்மையாகவும் செயல்படுவேன். எனது முதல் பணியாக மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீா், தரமான சாலை, தெரு விளக்கு வசதி, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு நிா்வாக அமைப்புகளை பலப்படுத்தி உடனடியாக தீா்வு காண்பேன்.

மேலும், எனது செயல்பாடுகளை மக்கள் அறியும்படியாக 6 மாதத்துக்கு ஒருமுறை செயல்பாட்டு அறிக்கையை மக்கள் மன்றத்தில் சமா்ப்பிப்பேன். அனைத்து மாமன்ற உறுப்பினா்களையும் இணைத்து, தூய்மையான முன்னேற்றத்துக்கான மாமதுரையை நோ்மையான வழியில் உருவாக்கப் பாடுபடுவேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.