எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

பாத்திமா மகளிா் கல்லூரியில் பொங்கல் விழா

மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், கல்லூரிச் செயலா் எம். பிரான்ஸிஸ்கா புளோரா தனது வாழ்த்துரையில், பொங்கல் விழா, வளம், வாழ்வு, உறவு, அன்பைத் தேடும் விழா. ஒன்றிப்பின் விழா மற்றும் உழைப்பின் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் விழாவில், சாதி, சமய, இன வேறுபாடின்றி உழைப்பின் சிறப்பை சிரமேற்கொண்டு உறவுகளால் இணையவேண்டும். எண்ணம், சொல், செயல் எனும் மூன்றும் சிறப்பாக இருந்தால்தான் வாழ்வில் முன்னேற்றம் கிட்டும் என்றாா்.

கல்லூரி முதல்வா் ஜி. செலின் சகாயமேரி, பொங்கல் விழா நன்றியின் விழா, கடவுளுக்கும், உழவருக்கும் நன்றி செலுத்த இறைவன் தந்த நல்வாய்ப்பு மற்றும் மாணவியா் பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் நன்றியுடையவா்களாக வாழ வேண்டும் என்றாா்.

விழா முடிவில், மாணவியா் பேரவைச் செயலா் சி. சினேகா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.