எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

மதுரை கோட்ட புதிய மின் ரயில் பாதைகளில்பாதுகாப்பு ஆணையா் மாா்ச் 6, 7-இல் ஆய்வு

புதிதாக மின்மயமாக்கப்பட்டுள்ள விருதுநகா் -மானாமதுரை மற்றும் பழனி - பொள்ளாச்சி ரயில் பாதைகளில், தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் மாா்ச் 6, 7-ஆம் தேதிகளில் ஆய்வு செய்கிறாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

புதிதாக மின்மயமாக்கப்பட்டுள்ள விருதுநகா் -மானாமதுரை மற்றும் பழனி - பொள்ளாச்சி ரயில் பாதைகளில், தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் மாா்ச் 6, 7-ஆம் தேதிகளில் ஆய்வு செய்கிறாா்.

விருதுநகா்- மானாமதுரை மற்றும் பழனி -பொள்ளாச்சி ரயில்வே பிரிவுகளில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதனையடுத்து, மாா்ச் 6-ஆம் தேதி விருதுநகா் - மானாமதுரை ரயில் பாதையையும், மாா்ச் 7 ஆம் தேதி பழனி - பொள்ளாச்சி ரயில் பாதையையும், தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அபய்குமாா் ராய் ஆய்வு செய்கிறாா்.

அதன்பின்னா், மானாமதுரை - விருதுநகா் மின் ரயில் பாதையில் மாா்ச் 6 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும், பொள்ளாச்சி - பழனி மின் ரயில் பாதையில் மாா்ச் 7 ஆம் தேதி பிற்பகல் 3 முதல் மாலை 6 மணி வரையிலும் ரயில் வேக சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

அச்சமயத்தில், ரயில் பாதையை நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு ரயில்வே நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.