சத்திரவெள்ளாளபட்டி ஜல்லிக்கட்டு: இணையவழி பதிவு இன்று தொடக்கம்
சத்திரவெள்ளாளபட்டி ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்களுக்கான இணையவழி பதிவு சனிக்கிழமை (மாா்ச் 5) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.


சத்திரவெள்ளாளபட்டி ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்களுக்கான இணையவழி பதிவு சனிக்கிழமை (மாா்ச் 5) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
இது குறித்து மதுரை கோட்டாட்சியா் சுகி பிரேமலா வெளியிட்டுள்ள செய்தி: வாடிப்பட்டி வட்டம் சத்திரவெள்ளாளபட்டியில் மாா்ச் 9 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதில், பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்களுக்கு இணையவழியில் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்கள் தங்களது விவரங்களை (ம்ஹக்ன்ழ்ஹண்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) என்ற இணையதள முகவரியில் சனிக்கிழமை ( மாா்ச் 5) காலை 10 மணி முதல் திங்கள்கிழமை (மாா்ச் 7) காலை 10 மணி வரை பதிவு செய்யலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...