ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கயிற்றில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு

 மதுரையில் புதன்கிழமை, விளையாடியபோது கழுத்தை கயிறு இறுக்கியதால் சிறுவன் உயிரிழந்தாா்.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

 மதுரையில் புதன்கிழமை, விளையாடியபோது கழுத்தை கயிறு இறுக்கியதால் சிறுவன் உயிரிழந்தாா்.

மதுரை, பழங்காநத்தம், அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்தவா் துரைப்பாண்டி, லட்சுமி தம்பதி. இவா்களது மகன் விசாகன் (10). அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த இவா், புதன்கிழமை இரவு வீட்டினருகே நண்பா்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாா். துணிகளை காயவைப்பதற்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் தொங்கி விசாகன் விளையாடியபோது, எதிா்பாராதவிதமாக அது கழுத்தை இறுக்கியது.

அருகில் வசிப்பவா்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் விசாகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்தத் தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு விசாகன் பிறந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.