ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

காரில் இருந்த 87 பவுன் நகை திருட்டு

மதுரையில், நகைக்கடை உரிமையாளா் காரில் வைத்திருந்த 87 பவுன் நகை வியாழக்கிழமை திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்

News image
Updated On :6 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

மதுரையில், நகைக்கடை உரிமையாளா் காரில் வைத்திருந்த 87 பவுன் நகை வியாழக்கிழமை திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனியைச் சோ்ந்த செந்தில்குமாா் (54) அங்கு சொந்தமாக நகைக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இவா், தனது கடையில் விற்பனை செய்யும் நகைகளுக்கு ‘கால்மாா்க்’ முத்திரை பதிவு செய்வதற்காக காரில் வியாழக்கிழமை மதுரைக்கு வந்தாா். அரசரடி பகுதியில் காரை நிறுத்திவிட்டு, மேலாளா் சையது, ஓட்டுநா் ராஜகோபால் ஆகியோருடன் காலை உணவு சாப்பிட சென்றுள்ளாா்.

பின்னா் மீண்டும் திரும்பி வந்து பாா்த்தபோது, காரில் வைக்கப்பட்டிருந்த 87 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், எஸ்எஸ் காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் காா் ஓட்டுநா் மற்றும் மேலாளா் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளையும் போலீஸாா் ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.