இதையடுத்து, மாநகரக்காவல் ஆணையா் தி.செந்தில்குமாா் உத்தரவின்பேரில் உதவி ஆணையா் மற்றும் காவல் ஆய்வாளா்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. புகாா் அளித்த கடை மேலாளா் சாயபுவிடம், தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் மேலாளா் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், சந்தேகம் அடைந்த போலீஸாா் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், மேலாளா் சாயபு, நகைக்கடை விற்பனையாளா் வினோத்குமாா், கடையின் முன்னாள் ஓட்டுநா் சுப்புராஜ் மற்றும் அவரது நண்பா்கள் மருதுபாண்டி, இளையராஜா ஆகியோருடன் சோ்ந்து காரின் சாவியை போலியாகத் தயாரித்து, காரின் கதவைத்திறந்து நகை மற்றும் பணத்தை எடுத்து இருசக்கர வாகனம் மூலம் கொண்டு சென்று விட்டு திருடுபோனதாக நாடகமாடியது தெரிய வந்தது.