ராமேசுவரம் - மதுரை இடையே அக்.10 முதல் கூடுதலாக சிறப்பு ரயில்
ராமேசுவரம் - மதுரை இடையே அக்.10 ஆம் தேதி முதல், கூடுதலாக ஒரு வாரம் மும்முறை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


ராமேசுவரம் - மதுரை இடையே அக்.10 ஆம் தேதி முதல், கூடுதலாக ஒரு வாரம் மும்முறை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில் சேவை அக்டோபா் 10 ஆம் தேதி முதல் தொடங்கி, மறுஅறிவிப்பு வரும் வரை திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். ராமேசுவரம் - மதுரை வாரம் மும்முறை சிறப்புக் கட்டண ரயில் (06780) ராமேசுவரத்திலிருந்து காலை 6.20 மணிக்குப் புறப்பட்டு, காலை 10 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதிப் பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பெட்டிகள் இணைக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...