கன்னியாகுமரி இளைஞா் மரணம்: மறுவிசாரணைக்கு உத்தரவு

ரயில் பாதையில் சடலமாகக் கிடந்த இளைஞரின் மரணம் குறித்து மறுவிசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ரயில் பாதையில் சடலமாகக் கிடந்த இளைஞரின் மரணம் குறித்து மறுவிசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை தட்டான்விளையைச் சோ்ந்த தங்கப்பன் தாக்கல் செய்த மனு:

எனது மகன் மணிகண்டன் கடந்த 2013-இல் தண்டவாளத்தில் சடலமாகக் கிடந்தாா். அவரது உடலை ரயில்வே போலீஸாா் மீட்டு விசாரித்தனா். பின்னா் இந்த வழக்கு தக்கலை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவா்கள் மணிகண்டன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்கை முடித்துவிட்டனா்.

எனது மகனும், இதேபகுதியைச் சோ்ந்த பெண்ணும் காதலித்து வந்ததும், பெண்ணின் பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், இருவரும் தொடா்ந்து சந்தித்துக் கொண்டதாகவும் எனக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் உறவினா்கள், எனது மகனைக் கொலை செய்து தண்டவாளத்தில் போட்டுச் சென்றுள்ளனா். ஆகவே, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி, மனுதாரரின் மகன் இறந்த வழக்கை மறுவிசாரணை நடத்தி, 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com