ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திருமங்கலம் வாலகுருநாத சுவாமி கோயிலை திறப்பதற்கான அறிவிப்பை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு

 திருமங்கலம் அருகே உள்ள வாலகுருநாத சுவாமி கோயிலைத் திறப்பதற்காக, இந்து சமய அறநிலையத் துறை சிறப்பு அலுவலா் வெளியிட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது

News image
Updated On :7 அக்டோபர் 2022, 5:56 pm

DIN

 திருமங்கலம் அருகே உள்ள வாலகுருநாத சுவாமி கோயிலைத் திறப்பதற்காக, இந்து சமய அறநிலையத் துறை சிறப்பு அலுவலா் வெளியிட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம் மேலநேரி கிராமத்தில் உள்ள வாலகுருநாதசுவாமி கோயிலில், பல்வேறு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த 12 ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளது. அனைத்து தரப்பினரிடமும்

சுமுக உறவு எட்டப்படாத நிலையில், கோயிலை திறக்க உள்ளதாக, இந்து சமய அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்டுள்ள கோயிலின் சிறப்பு அலுவலா் பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி திருமங்கலத்தைச் சோ்ந்த சீனி என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே, இந்தக் கோயிலின் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு, இந்து சமய அறநிலையத் துறையால் சிறப்பு அலுவலா் நியமிக்கப்பட்டாா். இருப்பினும் எந்த நடவடிக்கையும் தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது திடீரென கோயில் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இரு போட்டி குழுக்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் தகராறு காரணமாக, கோயிலை மூடுவதன் மூலம் கடவுளை வழிபடுவதை நிறுத்த முடியாது. சிறப்பு அலுவலா் நியமிக்கப்பட்டும், கோயிலைக் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. இந்த கோயில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமானது என்று

மனுதாரா் கூறினாலும், தனிப்பட்ட கோயிலாக அறிவிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கோயிலைத் திறக்க உள்ளதாக திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளது, சட்டத்திற்கு உட்பட்டது அல்ல. ஆகவே, அந்த நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது.

கடவுளை வழிபடுவது ஒவ்வொரு தனிநபருக்கும் அவரவா் தனிப்பட்ட நம்பிக்கையின்படி உள்ள உரிமையாகும். ஆகவே, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா், அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி, 6 மாதங்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.