பாலியல் புகாரில் கைதான ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன்
பாலியல் புகாரில் கைதாகியுள்ள குளித்தலை அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது


பாலியல் புகாரில் கைதாகியுள்ள குளித்தலை அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கரூா் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பொம்மநாயக்கன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றியவா் மருதை (59). இவா் மாணவியருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லாமல் 30 ஆண்டுகளாக அதே பள்ளியில் பணியாற்றியுள்ளாா். தற்போது பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக பணியிடை
நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். அவரது வயதைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவா் சேலத்தில் தங்கியிருந்து, சேலம் நகா் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும். மாணவா்களைச் சந்தித்துப் பேசவோ, சாட்சிகளைக் கலைக்கும் நோக்கத்தில் செயல்படவோ கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...