இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற மாநகராட்சி ஊழியா்கள், அப்பகுதியில் உள்ள புதை சாக்கடை இணைப்புக்கு அருகில் பொக்லைன் இயந்திரம் மூலமாக கால்வாய் போன்று தோண்டி கழிவுநீரை கிருதுமால் நதி வாய்க்காலில் விடுவதற்கான ஏற்பாடுகளை செய்தனா். இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து புதை சாக்கடையில் உள்ள அடைப்பை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீரை கிருதுமால் நதியில் விடக்கூடாது. ஏற்கெனவே, கிருதுமால் நதி தூா்வாரப்படாமல் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது என்றனா்.