ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஊழலற்ற இந்தியா விழிப்புணா்வு நடைபயணம்: கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு

மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊழற்ற இந்தியா விழிப்புணா்வு நடைபயணத்தில் கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊழற்ற இந்தியா விழிப்புணா்வு நடைபயணத்தில் கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக்கல்லூரி மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் ‘முன்னேறிய தேசத்துக்கு ஊழலற்ற இந்தியா‘ விழிப்புணா்வு நடைபயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் அலுவலகம் முன்பாக நடைபெற்ற தொடக்க விழாவில், இந்தியன் ஆயில் நிறுவன பொது மேலாளா் ஹூமாராவ் மற்றும் காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி முதல்வா் பா.ஜாா்ஜ் ஆகியோா் நடைபயணத்தை தொடங்கி வைத்தனா். இதைத்தொடா்ந்து விழிப்புணா்வு நடைபயணம் இந்தியன் ஆயில் அலுவலகத்தில் இருந்து தொடங்கி 3 கி.மீ. ஊா்வலமாக சென்றது. இதில் காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவியா், இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள், ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.