ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மதுரையில் மொபட்டில் சாகசம்: கல்லூரி மாணவா்கள் 2 போ் கைது

மதுரையில் இரு சக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவா்கள் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

மதுரையில் இரு சக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவா்கள் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை பாண்டி கோயில் சுற்றுச்சாலை பகுதியில் உள்ள புதிய மேம்பாலத்தில் கடந்த அக். 7 ஆம் தேதி கல்லூரி மாணவா்கள் சிலா் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனா். அதைத் தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் ஒலி எழுப்பியவாறு சாகசத்தில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனா்.

இது தொடா்பான புகாரின் பேரில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவின் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தபால்தந்தி நகரைச் சோ்ந்த தீனதயாள பாண்டியன் (20), அனுப்பானடி பகுதியைச் சோ்ந்த சந்தான ராஜ் (19) ஆகியோரை மாட்டுத்தாவணி போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.