ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சமூக ஊடகங்களில் அவதூறான பதிவுகளை நீக்கும் வழிமுறைகள் என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

 சமூக ஊடகங்களில் அவதூறான பதிவுகளை நீக்குவதற்கான வழிமுறைகள் குறித்து கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த வழக்கை தீா்ப்புக்காக ஒத்திவைத்தது.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

 சமூக ஊடகங்களில் அவதூறான பதிவுகளை நீக்குவதற்கான வழிமுறைகள் குறித்து கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த வழக்கை தீா்ப்புக்காக ஒத்திவைத்தது.

‘யூடியூப்’ சேனலுக்கு அளித்த பேட்டியில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதித் துறை குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக, ‘யூடியூபா்’ சவுக்கு சங்கா் மீது சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில், அவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவதூறு பரப்பும் வகையில் உள்ள அவரது பதிவை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், முகநூல், சுட்டுரை, யூடியூப் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி ஆகியோா் கொண்ட சிறப்பு அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இத்தகைய அவதூறான பதிவுகள், சமூக ஊடகங்களால் எவ்வாறு கையாளப்படுகின்றன என்று கேள்வி எழுப்பினா்.

முகநூல், சுட்டுரை, யூடியூப் நிறுவனங்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் உள்ளடக்கங்களை முன் தணிக்கை செய்ய இயலாது. நீதிமன்றம் அல்லது மத்திய அரசின் உத்தரவுகளின்படி மட்டுமே இத்தகைய பதிவுகளை அகற்ற முடியும். ‘யுஆா்எல்’ எனப்படும் பதிவின் இணைப்பை வழங்கினால், அத்தகைய பதிவு அகற்றப்படும் என்று தெரிவித்தாா்.

தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீரா கதிரவன் வாதிடுகையில், அச்சு ஊடகம், காட்சி ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் சமூக ஊடகங்கள், எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் செயல்படுகின்றன. இதனால், தனிமனித உரிமை பாதிக்கப்படுவது மட்டுமன்றி, சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுகிறது. ஆகவே, இதை வரன்முறைப்படுத்த வேண்டும் என்றாா். இதையடுத்து, இந்த வழக்கை தீா்ப்புக்காக நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.