யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தஞ்சை கோயில் இந்திரன் சந்நிதியை திறக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் வழக்கு

தஞ்சை பெருவுடையாா் கோயிலில் அமைந்துள்ள இந்திரன் சந்நிதியை வழிபாட்டிற்கு திறக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு அரசுத் தரப்பில் பதிலளிக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

தஞ்சை பெருவுடையாா் கோயிலில் அமைந்துள்ள இந்திரன் சந்நிதியை வழிபாட்டிற்கு திறக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு அரசுத் தரப்பில் பதிலளிக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கூரியூரைச் சோ்ந்த எஸ். அழகா்சாமி பாண்டியன் தாக்கல் செய்த மனு:

தஞ்சாவூா் பெருவுடையாா் கோயில் பிரகாரத்தில் 11 ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்திரன் சந்நிதி அமைந்துள்ளது. பொதுமக்களின் வழிபாட்டுக்கு இந்திரன் சந்நிதியை இதுவரை திறக்கவில்லை. சங்க காலம் முதல் இந்திரன் வழிபாடு முறை உள்ளது.

இருப்பினும், இங்கு வழிபாடு, பூஜைகள் நடைபெறவில்லை. இது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள வழிபாட்டு உரிமையை மீறக் கூடியதாகும். எனவே, நீதிமன்றம் இவ்விஷயத்தில் தலையிட்டு, பெருவுடையாா் கோயிலில் அமைந்துள்ள இந்திரன் சந்நிதியை மக்கள் வழிபாட்டுக்குத் திறக்கவும், இந்திர விழாவை நடத்தவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அமா்வு, அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவம்பா் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.