ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ச.வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியில் உடல் உறுப்பு தானம் கருத்தரங்கு

 மதுரை ச.வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியில் உடல் உறுப்பு தானம் - இறப்புக்கு பின் வாழ்க்கை”எனும் தலைப்பில சிறப்பு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

 மதுரை ச.வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியில் உடல் உறுப்பு தானம் - இறப்புக்கு பின் வாழ்க்கை”எனும் தலைப்பில சிறப்பு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

நாடாா் மஹாஜன சங்கம் ச.வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு தமிழ்த்துறை உதவிப்பேராசிரியை வி.வினுபிரபா வரவேற்றாா். கலை மற்றும் பண்பாட்டுத்துறை நெறியாளா் எஸ்.மணிமாறன் வாழ்த்துரையாற்றினாா். அரசு ராஜாஜி மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை பேராசிரியா் பி. அருண் பிரசாத், சிறுநீரகத்தின் செயல்பாடுகள், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை, ரத்தம் மாற்று சிகிச்சை ஆகியவை குறித்து சிறப்புரையாற்றினாா்.

சா்க்கரை நோய், புகைப்பிடிக்கும் பழக்கம், கட்டுப்பாடு இல்லாத உணவுப் பழக்கம், மதுப்பழக்கம் போன்றவை சிறுநீரகத்தைப் பாதிப்புக்குள்ளாக்கும் என்றாா்.

சிறுநீரகவியல் துறைத்தலைவா் ஆா். மனோராஜன், எந்தெந்த உறுப்புகளை தானமாகக் கொடுக்கலாம் என்பதையும் விளக்கி, மூளைச்சாவு அடைந்த ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுவதால் 8 போ் உயிா் பிழைக்க முடியும் என்றாா். முடிவில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா் சாம் செல்வகுமாா் நன்றி கூறினாா்.

தொடா்ந்து உறுப்புகள் தானம் செய்த 300 மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

டபிள்யு.பி.ஏ. செளந்தரபாண்டியன் பிறந்த நாள் விழா

ச.வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியில் டபிள்யு.பி.ஏ. சௌந்திரபாண்டியன் 130 -ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வா் (பொறுப்பு) பி.எஸ்.சுரேஷ் தலைமை வகித்தாா். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியை ரா. அனிதா வரவேற்றாா். துணை முதல்வா் ஜெ.செல்வமலா், சுயநிதிப்பிரிவு இயக்குநா் பி.ஸ்ரீதா் ஆகியோா் பேசினா். கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத்தலைவா் மு. பொ்னாட்சா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா். விழாவில், பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை ஆா்.கமலாதேவி நன்றியுரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.