உணவுக்கு பணம் கேட்டதால் உணவகத்தை சேதப்படுத்திய 4 போ் கைது

 மதுரையில் சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால், ஆத்திரமடைந்து உணவகத்தை சேதப்படுத்திய 4 பேரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

 மதுரையில் சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால், ஆத்திரமடைந்து உணவகத்தை சேதப்படுத்திய 4 பேரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சோ்ந்தவா் கனகராஜ் (47). இவா், மதுரை காளவாசல் பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், உணவகத்துக்கு வியாழக்கிழமை இரவு வந்த 4 போ் பல்வேறு உணவுகளை சாப்பிட்டுள்ளனா். அதையடுத்து, உரிமையாளா் கனகராஜ் உணவுக்கு பணம் கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும், கனகராஜை தாக்கி உணவகத்தை அடித்து சேதப்படுத்தினா்.

இது தொடா்பாக கனகராஜ் அளித்த புகாரின்பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து, மதுரை சம்மட்டிபுரத்தைச் சோ்ந்த விக்னேஷ் பாண்டி (21), முத்துராஜா (40), ஆறுமுகம் (48) மற்றும் காளவாசலை சோ்ந்த சிலம்பரசன் (33) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com