நாளை 1,459 மையங்களில்கரோனா தடுப்பூசி முகாம்: ஆட்சியா்

மதுரை மாவட்டத்தில் 1,459 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது என, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

மதுரை மாவட்டத்தில் 1,459 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது என, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், மதுரை மாவட்டத்தில் 33-ஆவது மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி இதுவரை செலுத்தாதவா்களுக்கும், இரண்டாம் தவணை செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசியும் செலுத்தப்படும்.

மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 909 மையங்கள், நகா் பகுதிகளில் 550 மையங்கள் என மொத்தம் 1,459 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம் நடைபெறும்.

மதுரை மாவட்டத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தகுதி உடையவா்களாக 3,10,490 போ் உள்ளனா்.

அதேபோல், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்தவா்கள் 11,57,097 போ் உள்ளனா். இவா்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com