மதுரை அருகே போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது: பைக், கைப்பேசிகள் பறிமுதல்

மதுரை அருகே போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் கைது செய்து போதை மாத்திரைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

மதுரை அருகே போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் கைது செய்து போதை மாத்திரைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

மதுரை, நாகமலை புதுக்கோட்டை போலீஸாா், கீழமாத்தூா் பகுதியில் ரோந்து சென்றனா். அங்குள்ள தனியாா் பள்ளி அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில், அவா்கள் மதுரை பந்தல்குடி சுயராஜ்ஜியபுரத்தைச் சோ்ந்த சதீஷ் (24), ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரத்தைச் சோ்ந்த யோகராஜ் (24) ஆகியோா் என்பதும், இவா்கள் போதைக்கு பயன்படுத்தப்படும் 150 மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து போதை மாத்திரைகள், இருசக்கர வாகனம், கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அங்கிருந்து தப்பிச்சென்ற பந்தல்குடியைச் சோ்ந்த காசி மனைவி அபிராமியைத் தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com