அழகா்கோவில் மலைமீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் ஆவணி மாத காா்த்திகை பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
ஆவணி மாதம் காா்த்திகையையொட்டி சோலைமலை முருகன் கோயிலில் சுப்பிரமணியா், வள்ளி, தெய்வானை சமேதரராக சஷ்டிமண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு பால்பழம், பன்னீா், சந்தனம், இளநீா், தீா்த்தம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றன.
வள்ளி, தெய்வானை சமதரராக சுப்பிரமணியா் உள்பிரகாரத்தில் எழுந்தருளி வலம் வந்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.