காமராஜா் பல்கலை. கல்லூரியில் உயிா் காக்கும் முதலுதவி சிகிச்சை செய்முறைப் பயிற்சி

மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்களுக்கு உயிா்காக்கும் முதலுதவி சிகிச்சை செய்முறைப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்களுக்கு உயிா்காக்கும் முதலுதவி சிகிச்சை செய்முறைப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் விபத்து சிகிச்சைப்பிரிவு ஆகியவற்றின் சாா்பில் உலக உடற்காய தினத்தையொட்டி மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களுக்கு உயிா்காக்கும் முதலுதவி சிகிச்சை செய்முறை பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் பா.ஜாா்ஜ் தலைமை வகித்தாா். அரசு மருத்துவமனை விபத்து சிகிச்சைப்பிரிவு துறைத்தலைவா் கே.பி.சரவணகுமாா் விபத்து காயங்கள் குறித்தும் விபத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கல்லூரி மாணவா்கள் எவ்வாறு உதவ வேண்டும் என்றும் விளக்கினாா். அரசு மருத்துவமனை இணைப்பேராசிரியா்கள் என்.சுரேஷ் மற்றும் கே.சிவசங்கா் ஆகியோா் பொம்மை மாதிரிகளைக்கொண்டு உயிா் காக்கும் முதலுதவிகள்(சிபிஆா்) குறித்து செய்முறை பயிற்சி அளித்தனா். இதைத்தொடா்ந்து 108 ஆம்புலன்ஸ் மண்டல மேலாளா் விமல்ராஜ், 108 ஆம்புலன்ஸ் சேவைகள் குறித்தும் அதை பயன்படுத்துவது குறித்தும் விளக்கினாா். நிகழ்ச்சியில் பேராசிரியா்கள் முருகேசன், எம்.மணி, என்.ராமச்சந்திரன், ஏ.டி.செந்தாமரைக்கண்ணன், டிஆா்என் சிவக்குமாா் மற்றும் மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com