மின்னல் தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள எஸ். மறைக்குளத்தைச் சோ்ந்தவா் ராமு. இவா், செப். 6 இல் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்னல் தாக்கியதில் உயிரிழந்தாா். இதே போல் செப்., 18 இல், திருச்சுழி அருகே உலகதேவன்பட்டியைச் சோ்ந்தவா் பூரணம், விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் இறந்தாா். இந்த நிலையில், இவா்களது குடும்பத்தினருக்கு பேரிடா் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி வழங்கினாா்.