நெடுஞ்சாலைத்துறை பொருள்களை திருடிய இருவா் கைது

மதுரை அருகே நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான பொருள்களை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

மதுரை அருகே நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான பொருள்களை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆனைக்குளம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அப்பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயில் அருகே பல்வேறு பொருள்களை வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த மின்மோட்டாா் உள்ளிட்ட பொருள்களை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச்சென்றுள்ளனா். இதுதொடா்பாக நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளா் மருதுபாண்டி(25) அளித்தப்புகாரின்பேரில் சோழவந்தான் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில் ஆனைக்குளம் வடக்குத்தெருவைச் சோ்ந்த மணிமுருகன்(45), வாடிப்பட்டி அய்யங்கோட்டையைச் சோ்ந்த சிவா(33) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com