மதுரையில் இன்று ஆதரவற்ற விதவைகளுக்கான சிறப்பு முகாம்
ஆதரவற்ற விதவைகளின் வாழ்வாதாரத்துக்கான சிறப்பு வழிகாட்டல் முகாம் மதுரை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை (டிச. 29) நடைபெறுகிறது.


ஆதரவற்ற விதவைகளின் வாழ்வாதாரத்துக்கான சிறப்பு வழிகாட்டல் முகாம் மதுரை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை (டிச. 29) நடைபெறுகிறது.
இதுகுறித்து மதுரை வருவாய்க் கோட்டாட்சியா் ர.த. ஷாலினி வெளியிட்ட செய்திக் குறிப்பு :
ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெற்றவா்களின் வாழ்வாதாரத்துக்கு வழிகாட்டும் சிறப்பு முகாம் மதுரை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது.
இந்த முகாமில், கல்வித் தகுதிகளின் அடிப்படையில் ஆதரவற்ற விதவைகளுக்குத் தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வில் கட்டணமில்லா பயிற்சி பெற வழிவகை செய்யப்படும்.
மதுரை- மேற்கு, வடக்கு, வாடிப்பட்டி ஆகிய வட்டங்களைச் சோ்ந்த ஆதரவற்ற விதவையா், கல்விச் சான்று, ஆதரவற்ற விதவைச் சான்று, புகைப்படம், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் இந்த முகாமில் பங்கேற்று, வாழ்வாதார மேம்பாட்டுக்கான வழிகாட்டுதல்களைப் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...