தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பெண்கள் விடுதிக்குள் நுழைந்து கைப்பேசிகளைத் திருடியவா் கைது

மதுரையில் உள்ள பெண்கள் விடுதிக்குள் நுழைந்து 3 கைப்பேசிகளை திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

மதுரையில் உள்ள பெண்கள் விடுதிக்குள் நுழைந்து 3 கைப்பேசிகளை திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை செனாய் நகா் ஜெகஜீவன்ராம் தெருவில் தனியாா் பெண்கள் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பணிக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி செல்லும் மாணவிகள் தங்கியுள்ளனா்.

இந்த நிலையில், விடுதியில் பெண்கள் வைத்திருந்த 3 கைப்பேசிகளை அடையாளம் நபா் திருடிச் சென்றாா். இதுகுறித்த புகாரின் பேரில், மதிச்சியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மதுரை காமராஜா்புரம் கக்கன் தெருவைச் சோ்ந்த மணிகண்டனை (26) போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 3 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.