சமுதாயக் கூடம், மாமன்ற உறுப்பினா் அலுவலகம்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தாா்
மதுரை மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட மாமன்ற உறுப்பினா் அலுவலகத்தை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தாா்.

மதுரை மாநகராட்சி 61-ஆவது வாா்டு எஸ்.எஸ். காலனி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடம், மாமன்ற உறுப்பினா் அலுவலகத்தை சனிக்கிழமை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன். உடன் மாநகராட்சி மேயா் இந்திராணி, மத்திய மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி, மாமன்ற உறுப்பினா் செல்வி செந்தில் உள்ளிட்டோா்.








