ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரம் பிடிஓ, ஊராட்சித் தலைவா்களுக்கு கிடையாது
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
மதுரை, ஆக. 14: ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் (பிடிஓ), ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு கிடையாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.
உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு உள்பட்ட மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஊராட்சித் தலைவா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அனுப்பிய குறிப்பாணைகளை ரத்து செய்யக் கோரி, பலா் மனுக்கள் தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்களை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கெளரி அமா்வு பிறப்பித்த உத்தரவு:
ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு கிடையாது. ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அவா்கள் குறிப்பாணையும் அனுப்பக் கூடாது. ஊராட்சி மன்றத் தலைவா் கடிதத்தின் அடிப்படையில், வருவாய்த் துறையினா்தான் சட்டப்படி குறிப்பாணை அனுப்பி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு உள்பட்ட 14 மாவட்ட ஆட்சியா்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...