கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

மதுரையில் வணிகா்கள் ஆா்ப்பாட்டம்

கட்டட வாடகைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் மதுரை அண்ணாநகரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
மதுரை அண்ணாநகா் பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வணிகா்கள்.
Updated On :11 டிசம்பர் 2024, 11:40 pm

Din

கட்டட வாடகைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் மதுரை அண்ணாநகரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி. செல்லமுத்து தலைமை வகித்தாா். மாநில கூடுதல் செயலா் பெரீஸ் பா. மகேந்திரவேல் முன்னிலை வகித்தாா்.

இதில், கட்டட வாடகைக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்தும், கூடுதல் சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும். குப்பை வரியை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா்கள் பாண்டியன், டேனியல் தங்கராஜ், மாநில இணைச் செயலா் சுரேஷ்பாபு, தமிழ்நாடு தொழில் வா்த்தகச் சங்கத் தலைவா் ஜெகதீசன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.