கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு அறிவிப்பு: முதல்வருக்கு நன்றி

தமிழக முதல்வருக்கு அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் நன்றி

News image
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு குறித்த அறிவிப்புக்காக, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை செவ்வாய்க்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்த அமைச்சா் பழனிவேல் தியாகராஜன். உடன், அவரது குடும்பத்தினா்.
Updated On :18 டிசம்பர் 2024, 10:16 pm

Din

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு அடுத்தாண்டு இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு, அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், அவரது குடும்பத்தினா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு அடுத்தாண்டு இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும் என அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா் பாபு அறிவித்தாா்.

இதற்காக, தமிழக தகவல் தொழில் நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், அவரது தாயும், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவருமான ருக்மணி பழனிவேல்ராஜன், குடும்பத்தினா், சென்னையில் தமிழக முதல்வரைச் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

இந்தத் தகவலை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.