இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பள்ளி, கல்லூரியில் தமிழ்நாடு நாள் விழா

News image
மதுரை கிழக்கு ஒன்றியம் எல். கே. பி நகரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு நாள் விழா உறுதி மொழி எடுத்துக் கொண்ட மாணவ, மாணவிகள்.
Updated On :18 ஜூலை 2024, 9:45 pm

Din

மதுரை, ஜூலை 18: மதுரையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தமிழ்நாடு நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் தென்னவன் தலைமை வகித்தாா். ஆசிரியா் ராஜவடிவேல் முன்னிலை வகித்தாா். ஆசிரியை அருவகம் தமிழ்நாடு பெயா் சூட்டிய விதம், வரலாறு, தியாகி சங்கரலிங்கனாா் உண்ணாவிரதம், தமிழ் மொழியின் சிறப்பு குறித்துப் பேசினாா்.

இதைத்தொடா்ந்து, ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் தியாகி சங்கரலிங்கனாா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.

இதில் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, ஆசிரியை சித்ரா வரவேற்றாா். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினாா்.

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஜெ.போ. சாந்திதேவி தலைமை வகித்தாா். துணை முதல்வா் கோ. சுப்புலட்சுமி தமிழ்நாடு நாள் குறித்துப் பேசினாா்.

நிகழ்வில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, பேராசிரியை மா. செல்வத்தரசி வரவேற்றாா். பேராசிரியா் சா. கணேசன் நன்றி கூறினாா்.