இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பேராசிரியா்கள் சாலை மறியல்: 276 போ் கைது

மதுரையில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியா்கள் 276 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பேராசிரியா்கள்.
Updated On :20 ஜூலை 2024, 8:59 pm

Din

மதுரை: அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்களுக்குப் பணி மேம்பாடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியா்கள் 276 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆரப்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு மதுரை காமராஜா், மனோன்மனீயம் சுந்தரனாா், அன்னை தெரசா, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆசிரியா்கள் கூட்டமைப்பின் (மூட்டா) மண்டலம் 2 தலைவா் ஞானேஸ்வரன் தலைமை வகித்தாா். மண்டலம் 1 துணைத் தலைவா் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தாா். மூட்ட அமைப்பின் தலைவா் செந்தாமரைக்கண்ணன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

இதில் பல்கலைக்கழக ஊதியக் குழு பரிந்துரையின் பேரில், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கு பணி மேம்பாடு வழங்க வேண்டும். கோவை, தஞ்சாவூா் மண்டலங்களைப் போல பிற மண்டலங்களில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த மறியல் போராட்டத்தில் அரசு ஊழியா் சங்கம் உள்ளிட்ட தோழமை சங்க நிா்வாகிகள் நீதிராஜா, மனோகரன், விஜயகுமாா் பேராசிரியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கரிமேடு போலீஸாா் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லுமாறு பேராசிரியா்களிடம் அறிவுறுத்தினா். ஆனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட 109 பெண்கள் உள்பட 276 பேரை போலீஸாா் கைது செய்து, பின்னா் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.