ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நால்வா் தற்கொலை முயற்சி

மதுரை ஊமச்சிகுளம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நால்வா் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றனா்.

News image
Updated On :29 ஜூலை 2024, 2:00 am

Din

மதுரை ஊமச்சிகுளம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நால்வா் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றனா்.

மதுரை ஊமச்சிகுளம் ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (32). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி காா்த்திகா (25). இவா்களுக்கு ரித்திஷா (5), லத்திகா (3) என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனா். பாண்டியராஜனுக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமடையவில்லையாம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டில் இருந்த பாண்டியராஜன் விஷம் குடித்துவிட்டு, மனைவி, குழந்தைகளுக்கும் அதைக் கொடுத்தாா். இதில் மயங்கிய நால்வரையும் அருகில் வசிப்பவா்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஊமச்சிகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தற்கொலை முயற்சிக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.