

சூரத்தின் வெசு பகுதியில் தம்பதியினர் அவர்களது 9 வயது மகளும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காவல் நிலைய ஆய்வாளர் ஜே.சி. ஜாதவ் கூறுகையில்,
பிகாரைச் சேர்ந்தவர் பால்முகுந்த். அவரது மனைவி பிரியங்கா மற்றும் அவரது மூத்த மகள், இளைய மகள் ஆகிய நால்வரும் விஷம் கலந்த பொருளை உட்கொண்டுள்ளனர். அவர்களில் மூவர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தனர்.
அதேசமயம் தம்பதியரின் ஏழு வயது இளைய மகள் உயிர் பிழைத்துள்ளார்.
பால்முகுந்த் ஒரு பங்கு வர்த்தகர் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்து வந்தார். இந்த நிலையில், வைபவ் ருங்தா என்ற நபர் துன்புறுத்தியதாகத் தற்கொலைக் குறிப்பைச் சம்பவ இடத்திலிருந்து காவல்துறை மீட்டனர்.
அந்த நபர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது, ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.