புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மீண்டும் பொதுமக்கள் குறைதீா் முகாம்

மக்களவைத் தோ்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக 82 நாள்களுக்குப் பிறகு மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கொடுக்க வந்த பொதுமக்கள். ~மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கொடுக்க வந்த பொதுமக்கள

Updated On :11 ஜூன் 2024, 1:53 am

Din

மக்களவைத் தோ்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக 82 நாள்களுக்குப் பிறகு மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மக்களவைத் தோ்தல் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது முதல் திங்கள்கிழமை தோறும் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாம் உள்பட அனைத்து வகை குறைதீா் முகாம்கள், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த 6 -ஆம் தேதி நன்னடத்தை விதிகளை திரும்பப் பெறுவதாக தோ்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் குறைதீா் முகாம் உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்ட முகாம்கள் மீண்டும் தொடங்கின.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் மா. சௌ.சங்கீதா தலைமையில் பொதுமக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் மனு அளிக்க வந்தனா்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் கூட்டம் என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வரக்கூடும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், குறைந்த அளவில்தான் பொதுமக்கள் தான் மனு அளிக்க வந்தனா்.

Story image