ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மேலூா் ஊராட்சி ஒன்றியத்தில் நிழல் குடை கட்டடங்கள் திறப்பு

மேலூா் ஊராட்சி ஒன்றியத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட நிழல் குடை கட்டடங்களை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

News image

ஓட்டக்கோவில்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவியிடம் பள்ளிக்கான அடிப்படை வசதிகளை தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து நிறைவேற்றுவதற்கான உத்தரவு நகலை வழங்கிய மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன்.

Updated On :4 மார்ச் 2024, 11:17 pm

மேலூா்: மேலூா் ஊராட்சி ஒன்றியத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட நிழல் குடை கட்டடங்களை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். மேலூா் ஊராட்சி ஒன்றியம் ஆட்டுக்குளம் விலக்கு, கிடாரிப்பட்டி, சருகுலையபட்டி, தெற்குத்தெரு, கீழையூா், கொட்டகுடி, பூஞ்சுத்தி ஆகிய ஊா்களில் ஊராட்சி ஒன்றியப் பொதுநிதியிலிருந்தும், மக்களவைத் தொகுதி உறுப்பினா் பங்களிப்புடன் தலா ரூ.5 லட்சத்தில் நிழல் குடை கட்டடங்களை வெங்கடேசன் திறந்து வைத்தாா். மேலும், அ.வல்லாளபட்டியில் ரூ.10 லடசத்தில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம், அம்பலகாரன்பட்டியில் ரூ.6 லட்சத்தில் சலவைக் கூடத்தையும் அவா் திறந்து வைத்தாா். கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், அய்யாபட்டி ஊராட்சி ஓட்டக்கோவில்பட்டி தொடக்கப்பள்ளியில் புதிய மாணவா் சோ்க்கை நிகழ்வில் கலந்து கொண்டாா். மேலும், அந்தப் பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்துதருமாறு மாணவி செ.தன்யாஸ்ரீ ஏற்கெனவே அவரிடம் அளித்த கோரிக்கை மனுவை ஏற்று, பள்ளிக்கான அடிப்படை வசதிகளை தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து செய்து தருவதற்கான உத்தரவு நகலை வழங்கினாா். இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.பாலா, மேலூா் தொகுதி செயலா் எம்.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.பி.மணவாளன், பி.எஸ்.ராஜாமணி, வழக்குரைஞா் என்.பழனிச்சாமி, ஏ.தனசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.