பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

பள்ளி, கல்லூரிகளில் மகளிா் தின விழா

பள்ளி, கல்லூரிகளில் மகளிா் தின விழா

News image
Updated On :8 மார்ச் 2024, 5:51 pm

பள்ளி, கல்லூரிகளில் மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை கிழக்கு ஒன்றியம், எல்.கே.பி.நகா் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக மகளிா் தின விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் ஜான்சி தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் எஸ்தா் இந்திராணி முன்னிலை வகித்தாா். இதில், டாக்டா் சாய் லட்சுமி நினைவு நூலகம் திறக்கப்பட்டது. விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியா் தென்னவன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொறுப்பு) நாகலட்சுமி உள்பட ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். மதுரை எஸ். வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியில் நடைபெற்ற மகளிா் தின விழாவுக்கு கல்லூரி முதல்வா் எம். ராஜேந்திரன் தலைமை வகித்தாா். துணை முதல்வா் ஜெ. செல்வமலா் முன்னிலை வகித்தாா். மதுரை சி.எஸ்.ஆா். நினைவுப் பள்ளி இயக்குநரும், சீதாலட்சுமி பள்ளியின் தாளாளருமான பூா்ணிமா வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். இந்த நிகழ்வில், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா். இதேபோல, மதுரையில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் மகளிா் தின விழா நடைபெற்றது.