மதுரை: மதுரையில் போக்சோ வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தவா் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா். விருதுநகா் பாத்திமா நகா் கிருஷ்ணாமாச்சாரியாா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜேசுராஜ் (20).
இவா், கடந்த 2021- ஆம் ஆண்டில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டாா். ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் இவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில், சிறையில் ஜேசுராஜூக்கு திங்கள்கிழமை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சிறை மருத்துவமனையில் முதலுதவி அளித்த பின்னா், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மத்திய சிறை கைதி உயிரிழப்பு

சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு

சிறையில் கைதி மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

உடல்நலக் குறைவு ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

