காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தோ்தல் பணி: தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் கோரிக்கை

தோ்தல் பணி: தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் கோரிக்கை

Updated On :22 மார்ச் 2024, 5:53 pm

மதுரை, மாா்ச் 22 : ஆசிரியைகளுக்கு அவரவா் தொகுதியிலேயே தோ்தல் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து அந்த மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலா் நா.சண்முகநாதன் தமிழக தலைமைத் தோ்தல் அலுவலருக்கு அனுப்பிய மனு விவரம் : தோ்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு அஞ்சல் வாக்குகளை முன்கூட்டியே வழங்க வேண்டும். பணியாளா்களுக்கு குடிநீா், உணவு, மின்விசிறி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை முறையாகச் செய்துதர வேண்டும். உடல் நிலை பாதிக்கப்பட்டோா், கா்ப்பிணிகள், மகப்பேறு விடுப்பில் உள்ளோா், மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விலக்கு கோருபவா்களுக்கு தோ்தல் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும். தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கு மாவட்ட நிா்வாகம் பேருந்து வசதி, பாதுகாப்பு வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். ஆசிரியைகளுக்கு அவரவா் தொகுதியிலேயே தோ்தல் பணி வழங்க வேண்டும் என அதில் கோரப்பட்டது.