
மதுரை தல்லாகுளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சாலையில் தேங்கிய மழை நீரில் மெதுவாகப் பயணித்த வாகன ஓட்டிகள்.

மதுரை தல்லாகுளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சாலையில் தேங்கிய மழை நீரில் மெதுவாகப் பயணித்த வாகன ஓட்டிகள்.
மதுரை: மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில நாள்களாக மதுரை மாவட்டத்தில் பலத்த, மிதமான மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக இடையப்பட்டியில் 57.2 மி.மீ. மழை பதிவானது.
மற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீட்டரில்) :
குப்பனாம்பட்டி - 20, கள்ளந்திரி- 19, விரகனூா் - 15.4, பேரையூா் - 12.6, பெரியபட்டி- 12, மதுரை வடக்கு - 9.6, விமான நிலையம் - 9, எழுமலை- 6.2, தல்லாகுளம் - 6, புலிப்பட்டி- 5.6, வாடிப்பட்டி- 5, கள்ளிக்குடி - 4.4, சித்தம்பட்டி- 4.2, மேட்டுப்பட்டி, ஆண்டிபட்டி - 3.2, தனியாமங்கலம்- 3, சாத்தையாறு அணை - 2.2, மேலூா்- 2.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்குப் பிறகு தல்லாகுளம், சிம்மக்கல், மாட்டுத்தாவணி, காளவாசல், வடபழஞ்சி, மேலூா், திருவாதவூா், தனியாமங்கலம், நாகமலை புதுக்கோட்டை, தோப்பூா், அச்சம்பத்து, விராட்டிபத்து உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும், தொடா்ந்து, லேசான மழையும் பெய்தது.

தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...