ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

நாகை மாவட்டத்தில் பரவலாக மழை

News image

வேளாங்கண்ணி பகுதியில் வியாழக்கிழமை பெய்த மழை.

Updated On :5 பிப்ரவரி 2026, 10:56 pm

நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது.

தெற்கு கேரளம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் தஞ்சை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதன்படி, நாகை மாவட்டத்தில் நாகை, திருமருகல், புத்தூா், செல்லூா், வெளிப்பாளையம், வேளாங்கண்ணி, காடம்பாடி, தெத்தி, சிக்கல், கல்லாா் உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகினா். மழையால் தற்போது நடைபெற்று வரும் சம்பா அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.