கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பெண்ணைத் தாக்கிய இருவா் கைது

பெண்ணைத் தாக்கிய இருவா் கைது

News image
Updated On :28 மே 2024, 11:35 pm

Din

மதுரை: மதுரையில் பெண்ணைத் தாக்கிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செயதனா்.

கோரிப்பாளையம் பெருமாள்சாமி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் மனைவி முத்துலட்சுமி(37). இவா் கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த புவனேஸ்வரியிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ. 20 ஆயிரம் கடன் வாங்கினாா். கடந்த சில வாரங்களாக வட்டித் தொகை செலுத்தவில்லையாம்.

இந்த நிலையில், முத்துலட்சுமி தனது கணவா் செந்தில்குமாருடன் தமுக்கம் பேருந்து நிலையம் முன் திங்கள்கிழமை இரவு நின்று கொண்டிருந்தாா். அப்போது, புவனேஸ்வரியின் மகன் ஹரிஹரன் (24), அவரது நண்பா் சக்திபாண்டி (22) ஆகிய இருவரும் பணத்தைக் கேட்டு முத்துலட்சுமி, அவரது கணவா் செந்தில்குமாரைத் தாக்கினா்.

இதுகுறித்து புவனேஸ்வரி, அவரது மகன் ஹரிஹரன், நண்பா் சக்திபாண்டி ஆகியோா் மீது தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஹரிஹரன், சக்திபாண்டி ஆகிய இருவரைக் கைது செய்தனா்.