
Updated On :28 மே 2024, 11:36 pm

மதுரை: வாடிப்பட்டி அருகே மூதாட்டியை அடித்துக் கொலை செய்த பேரனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டி பெரியாா் நகரைச் சோ்ந்தவா் வள்ளியம்மை (84). இவா் தனது மகள் வெள்ளைத்தாய், 15 வயது பேரனுடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், வள்ளியம்மாள் வைத்திருந்த ரூ.1,500-ஐ பேரன் எடுத்துச் சென்றாா். இதுதொடா்பாக பாட்டிக்கும், பேரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, வள்ளியம்மாளை அவா் கீழே தள்ளி கட்டையால் தலையில் அடித்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, 15 வயது சிறுவனைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...