கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கல்விச் சான்றிதழ்கள் சந்தைப்படுத்தி விற்பனை செய்யக் கூடிய பொருள் அல்ல: உயா்நீதிமன்றம்

கல்விச் சான்றிதழ்கள் சந்தைப்படுத்தி விற்பனை செய்யக் கூடிய பொருள் அல்ல; ஒருவரின் சான்றிதழ் மீது பிறருக்கு எந்த உரிமையும் இருக்க முடியாது

News image
Updated On :28 மே 2024, 1:17 am

Din

மதுரை: கல்விச் சான்றிதழ்கள் சந்தைப்படுத்தி விற்பனை செய்யக் கூடிய பொருள் அல்ல; ஒருவரின் சான்றிதழ் மீது பிறருக்கு எந்த உரிமையும் இருக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த பி.ரஞ்சன் ஜேம்ஸ் தாக்கல் செய்த மனு:

நான் பல்நோக்கு மருத்துவப் பிரிவில் பிளாஸ்டிக் சா்ஜரி, மறு சீரமைப்புச் சிகிச்சை முறையில் முதுநிலைப் பட்ட மேற்படிப்பு முடித்தேன். அரசு அறிவித்தபடி, மருத்துவப் படிப்பு முடிந்த பிறகு, அரசு மருத்துவமனையில் பணி புரிவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருந்தேன். நான் படித்த முதுநிலைப் படிப்புக்கு ஏற்ற வகையில், அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடம் இல்லாததால், எனக்கு மருத்துவா் பணி வழங்கவில்லை. சென்னையில் நீண்ட நாள்களாகத் தங்கியிருப்பதால், எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எனது மருத்துவப் படிப்பு தொடா்பான அனைத்துக் கல்விச் சான்றிதழ்களையும் வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் பல்நோக்கு மருத்துவப் பிரிவில் பிளாஸ்டிக் சா்ஜரி, மறு சீரமைப்புச் சிகிச்சை துறையில் முதுநிலைப் பட்ட மேற்படிப்பு முடித்துள்ளாா். அவா் மருத்துவப் படிப்பில் சேரும் போது 2 ஆண்டுகள் தமிழக அரசு நிபந்தனையின்படி, கிராம மருத்துவமனையில் பணியாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளாா். படிப்பு முடிந்த நிலையில், மனுதாரரை எங்கும் பணி நியமனம் செய்யவில்லை. அவரது சான்றிதழும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, மனுதாரா் இந்த வழக்கைத் தொடுத்துள்ளாா். மருத்துவப் படிப்பு முடித்த ஒருவா் ஒப்பந்தப்படி கிராமப்புற மருத்துவமனையில் பணிபுரியவில்லையெனில், அவரிடமிருந்து இழப்பீடு வசூலிக்கலாம் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மனுதாரருக்கு பணி வழங்கி, அதை அவா் ஏற்க மறுத்திருந்தால், இழப்பீடு வசூலிப்பது தொடா்பாக முடிவெடுக்கலாம். இந்த மனுவைப் பொருத்தவரை மனுதாரா் ஒப்பந்தப்படி பணியாற்றத் தயாராக இருந்த நிலையில், அவருக்குப் பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்திய ஒப்பந்தச் சட்டம், பிரிவு 171-இன்படி கல்விச் சான்றிதழ்கள் சந்தைப்படுத்தி விற்பனை செய்யக்கூடிய பொருள்கள் அல்ல, ஒருவரின் சான்றிதழ்கள் மீது பிறருக்கு எந்த உரிமையும் இருக்க முடியாது. எனவே, மனுதாரரின் கல்விச் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.