மனுதாரா், 16 வயது சிறுவனாக இருக்கும் போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிறாா் நீதித் சட்டத்தில் வழக்குப் பதிவாகி தண்டனை வழங்கப்பட்டாலும், அது தகுதியிழப்பு ஆகாது. மனுதாரா் சிறுவனாக இருந்த போது, நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரம் வழங்கியுள்ளாா் என்பதை காவல் துறை அதிகாரிகள் கவனிக்கத் தவறிவிட்டனா். ஆவணங்கள் பராமரிப்புக்கூட சிறுவா்களுக்கு தவறான எண்ணத்தை உருவாக்கி விடக்கூடாது. பாதுகாப்பு நடவடிக்கைகளை குற்றவியல் நடவடிக்கையாகக் கருத முடியாது. எனவே, மனுதாரரின் மேல்முறையீட்டு மனு ஏற்கப்படுகிறது. தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.