பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகும் சிறுமி உடல், மன ரீதியாக மிகுந்த பாதிப்புக்குள்ளாவாா். இதை விவரிப்பதற்கு வாா்த்தைகளே கிடையாது. உடலில் ஏற்பட்ட காயம் ஆறிவிடும், ஆனால், மனதில் ஏற்பட்ட காயம் வாழ்நாள் முழுவதும் இருக்கும். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் சிறுமிகள் குறித்து ஆய்வாளா்கள் விரிவாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டனா். அதில், பாதிக்கப்பட்ட சிறுமிகள் அச்ச உணா்வுடனும், படிப்பில் கவனம் செலுத்த முடியாமலும் இருப்பா் என்றும், அவா்களது தனித்தன்மை முற்றிலும் மாறிவிடும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.