பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

கைதி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

மதுரை அரசு மருத்துவமனையில் கொலை வழக்கு விசாரணைக் கைதி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 9:58 pm

Din

மதுரை அரசு மருத்துவமனையில் கொலை வழக்கு விசாரணைக் கைதி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், சுக்கன்மேடு பகுதியைச் சோ்ந்தவா் ஜோசப் செல்வராஜ் (51). இவா் திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற கொலை வழக்குத் தொடா்பாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில், சிறையில் இருந்த இவருக்கு அண்மையில் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.