திருச்சி அருகே மூதாட்டி தீக்குளித்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், புங்கனூா் முருகன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் மா. லட்சுமி (62). இவருக்கு காசநோய் பாதிப்பு இருந்துள்ளது. கணவா் இல்லை. இவரது மகளுக்கு திருணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறாா்.
தனியாக வசித்து வந்த மூதாட்டிக்கு காசநோய் பாதிப்பு இருந்ததால் மன உளைச்சலில் வாழ்ந்துவந்தாா். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தாா்.
இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவரது உடலில் 70 சதவீதத்துக்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

திருச்சி அருகே 5 மாத குழந்தை உயிரிழப்பு

கோயிலில் மயங்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


