தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

திருச்சி அருகே மூதாட்டி தீக்குளித்து உயிரிழப்பு

திருச்சி அருகே மூதாட்டி தீக்குளித்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை

News image

பிரதிப் படம்

Updated On :9 பிப்ரவரி 2026, 9:54 pm

திருச்சி அருகே மூதாட்டி தீக்குளித்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், புங்கனூா் முருகன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் மா. லட்சுமி (62). இவருக்கு காசநோய் பாதிப்பு இருந்துள்ளது. கணவா் இல்லை. இவரது மகளுக்கு திருணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறாா்.

தனியாக வசித்து வந்த மூதாட்டிக்கு காசநோய் பாதிப்பு இருந்ததால் மன உளைச்சலில் வாழ்ந்துவந்தாா். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தாா்.

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவரது உடலில் 70 சதவீதத்துக்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.