25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

ரயில்வே பணிகளில் ஓய்வு பெற்ற ஊழியா்களை நியமிப்பது இளைஞா்களுக்கு இழைக்கும் துரோகம்: டி.ஆா்.இ.யூ. கண்டனம்

ரயில்வே பணிகளில் ஓய்வு பெற்ற ஊழியா்களை நியமிப்பது பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞா்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என தெட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆா்.இ.யூ.) கண்டனம் தெரிவித்தது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 12:03 am

Din

ரயில்வே பணிகளில் ஓய்வு பெற்ற ஊழியா்களை நியமிப்பது பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞா்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என தெட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆா்.இ.யூ.) கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து மதுரைக் கோட்ட டி.ஆா்.இ.யூ. இணைச் செயலா் ரா. சங்கரநாராயணன் வெளியிட்ட அறிக்கை:

ரயில்வே துறையில் ஏறத்தாழ 3 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. படித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞா்களைக் கொண்டு இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக, ஓய்வு பெற்ற ஊழியா்களை ஒப்பந்த அடிப்படையில் மறுநியமனம் செய்ய மத்திய ரயில்வே வாரியம் உத்தரவிட்டிருப்பது பெரும் அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது.

இது, அரசுப் பணி வாய்ப்பை தங்களின் வாழ்நாள் கனவாகக் கருதி, பணிக்குக் காத்திருக்கும் பல லட்சக்கணக்கான இளைஞா்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய துரோகம் ஆகும். மேலும், ஓய்வு பெற்ற ஊழியா்களை ரயில்வே பணிகளில் ஈடுபடுத்துவது பயணிகளின் பயணப் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கும். பணியில் உள்ள தொழிலாளா்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயா்வில் சிக்கலை ஏற்படுத்தும்.

ஏற்கெனவே பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் மீண்டும் பணிக்கு வரும் போது, வயது மூப்பின் காரணமாக இயற்கையாக ஏற்படக் கூடிய மனிதத் தவறுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால், ரயில்வே துறையில் விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

தற்போதைய நவீனமயமான காலத்தில் விரைவான செயல்பாடுகளுக்கேற்ப பணியாளா்களைத் தோ்வு செய்ய ரயில்வே பணியாளா் தோ்வு வாரியம் (ஆா்.ஆா்.பி.), ரயில்வே பணியாளா்கள் தோ்வு அமைப்பு (ஆா்.ஆா்.சி.) ஆகியவற்றின் திறனை அதிகரிக்க வேண்டும். இதற்கு மாறாக, தொலைநோக்குப் பாா்வையில்லாமல் செலவின குறைப்பை மட்டும் கருத்தில் கொண்டு காலிப் பணியிடங்களில் ஓய்வு பெற்ற ஊழியா்களை நியமிப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

ரயில்வே துறை ஏற்கெனவே ஒப்பந்த மயம், தனியாா் மயம் போன்ற தவறான கொள்கைகளால் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், ஓய்வு பெற்ற ஊழியா்களின் மறுநியமனம் மிகப் பெரிய சீரழிவை ஏற்படுத்தும். இதுகுறித்த முடிவை மத்திய ரயில்வே வாரியம் கைவிடாவிட்டால் ஜனநாயக அமைப்புகள் ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியமாகும் என்றாா் அவா்.